உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு அலுவலக செயலாளர் க.வீரமணி இல்ல திருமண நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து மணமகன் கிருஷ்ணன்-மணமகள் தமிழ்த் தென்றல் இருவரும் திருமண இணை ஏற்பு உறுதிமொழி வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், எம்.கே.பூவராகவன், டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன், எம். கே.பழனி,மற்றும் எம்.ஆறுமுகம்.பி. சேகர், எம்.ராஜேந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.