districts

img

மூத்த வாக்காளர்களுக்கு கவுரவிப்பு

கள்ளக்குறிச்சி,அக். 1- மூத்த வாக்காளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷர்வன்குமார் மூத்த குடி மக்களை கவுரவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்ர் அலு வலக கூட்டரங்கில் உலக முதியோர் தினத்தை யொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வாக்காளர்களை கவுர விக்கும் ஆட்சியர் ஷ்ரவன்  குமார் தலைமையில் சனிக்கிழமை (அக். 1) நடை பெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட 17,911 வாக்காளர்கள் உள்ளனர். இந்த மூத்த குடிமக்கள் ஜனநாயக செயல்பாட்டில் தங்களது பங்களிப்பை அளிப்பதற்காகவும்,  இளை ஞர்களுக்கு முன்னு தாரணமாக திகழ்வதற்காக வும் அவர்களை கவுர விக்கும் விதமாக தேர்தல் ஆணையரின் ஆங்கி லம் மற்றும் வட்டார மொழி கடிதத்தை அவர்க ளுக்கு வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேலும் மாவட்டத்தி லுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 100 வயதுடைய வாக்கா ளர்களை அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்று வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். இதில் தேர்தல் வட்டாட்சியர் பாலகுரு, கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் சத்யநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.