districts

img

கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் தே.மலையரசன் அமோக வெற்றி

கள்ளக்குறிச்சி, ஜூன் 4 - கள்ளக்குறிச்சி மக்க ளவைத் தொகுதியில் இந்திய கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தே.மலையரசன் 5,61,589 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 14வது தொகுதி ஆகும். தொகுதி மறு சீரமைப்பின் அடிப்படையில் உருவான புதிய தொகுதி 1970களில் இரண்டு முறை கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியாக இருந்துள்ளது. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ள

ன. மொத்த வாக்காளர்கள் 1568681 இதில் ஆண்கள் 6.96.421,பெண்கள் 6, 93,173,மூன்றாம் பாலினம் 131. கள்ளக் குறிச்சி, ரிஷிவந்தியம்,,சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கள்ளக் குறிச்சி மாவட்டத்திலும், ஆத்தூர், கெங்கவல்லி,ஏற்காடு  சேலம் மாவட்டத்திலும் ஆகிய தொகுதியில் உள்ள டக்கியது,இதில் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் திமுகஆதிசங்கர்  வெற்றி பெற்றார், 16வது மக்களவைத் தேர்தலில் அதிமுக காமராஜ்   வெற்றி பெற்றார், 17 வது மக்களவைத் தேர்தலில் திமுக பொன் கௌதமசிகாமணி வெற்றி பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த 18 வது மக்க ளவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் இந்திய கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தே.மலையரசன் 561589வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  மொத்த வாக்குகள் 1568681 இதில் பதிவான வாக்குகள் 1242597பதிவான வாக்குச் சதவீதம் 79.21 போட்டியாளர்களின் எண்ணிக்கைதிமுகவைச் சேர்ந்த வெற்றி பெற்ற வேட்பாளர் மலையரசன் 53,784 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  

இவர் 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டு களில் தியாகதுருகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுநாகலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும்,2006 - 2011ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்ட மைப்பின் தலைவராகவும்,கட்டிடம் மற்றும் வரைபட குழு தொகுப்பின் கடலூர் மண்டல இயக்குநராகவும்,தற்போது தியாகதுருகம் பேரூர் திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ரா. குமரகுரு  507805வாக்குகளைப் பெற்று தோல்வியுற்றார்.