கள்ளக்குறிச்சி, ஜூன் 29- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டப் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு முன்னாள் படை வீரர் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 2022 - 23ஆம் கல்வி ஆண்டிற்கு முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம். பாலிடெக்னிக்கில் பட்டயப் படிப்புகள். பி.எஸ்.சி (நர்சிங்), பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எட். இந்திய மருத்துவம். பி.வி.எங்.சி, பி.எப்.எஸ்.சி, ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முன்னாள் படைவீரரைச் சார்ந்தோர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சார்ந்தோர் சான்று பெற வேண்டும். இணையதளம் மூலம் முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகுச் சான்று, அடையாள அட்டை, சார்ந்தோர்களின் பள்ளி இறுதி சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், முன்னாள் படைவீரர், விதவையரின் விண்ணப்பம் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக exerlvpm@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெறலாம். மேலும். சென்ற கல்வியாண்டில் பெற்ற சார்ந்தோர் சான்றிதழை இந்த கல்வியாண்டில் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04146-220524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பள்ளியில்