districts

img

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைபடுத்தி ஆணை வழங்குக! சாலை பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

கரூர், செப்.9- தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலை பணியா ளர் சங்கத்தின் கரூர் கோட்  டத்தின் சார்பில் கரூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர் களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைபடுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் இறந்தோரின் வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்  ணப்பித்தவர்களுக்கு உட னடியாக பணி வழங்க வேண்  டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோரின் கவ னத்தை இருக்கும் வகை யில் வெண்ணிற கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு கோட்  டத் தலைவர் செவந்தலிங் கம் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி, மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணி யன், மாவட்ட பொருளாளர் பொன் ஜெயராம், மாவட்ட செயலாளர் கெ.சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கோட்டப் பொருளாளர் பாலசுப்பிர மணி நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

;