கரூர், ஜூன் 15 - கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் நகர காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் தொழி லதிபர் ஒருவர் வெள்ளிக்கிழமை புகார் மனு கொடுத்தார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள வாங்கல் குப்புச்சி பாளையம் காட்டூரைச் சேர்ந்தவர் எம்.பிரகாஷ். இவர் வெள்ளிக் கிழமை கரூர் நகர காவல்நிலை யம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் முனைவர் கே.பிரபாகர் ஆகியோரிடம் முன்னாள் அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் மனு கொடுத்தார்.
அம்மனுவில் பிரகாஷ் தெரிவித்திருப்பதாவது:
நான் நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறேன். எனக்கு கரூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செய லாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பியான சேகர் என்ப வர் மூலமாக அறிமுகமாகி, எங்களுக் குள் பல வருடங்களாக பணம் கொடுக்கல்-வாங்கல் வரவு, செலவு இருந்து வந்தது. எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அவ ருக்கும் அவரது தம்பி சேகருக்கும் ரூ.10 கோடியை, வட்டிக்கு கடனாக கொடுத்து இருந்தேன்.
கொடுத்த பணத்திற்கு கடந்த 2023 இல் வட்டிக் கேட்ட போது, தகாத வார்த்தையால் திட்டி முன்னாள் அமைச்சர் என்னை அனுப்பி விட்டார். பின்னர் சில நாட்களில் குன்னம்பட்டி, தோரணக்கல்பட்டி யில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள எனது நிலத்தில் தறி போட வேண்டும் எனக் கூறி, 22 ஏக்கர் நிலத்தை எனக்கு எழுதித் தர வேண்டுமென முன்னாள் அமைச் சர் மிரட்டினார்.
ஏன் நிலத்தை உங்களுக்கு எழுதித் தர வேண்டும் எனக் கேட்ட போது, அமைச்சராக நான் இருந்த போது, என் செல்வாக்கை பயன்படுத்தி உன் வியாபாரத்தில் எவ்வளவோ சம்பாதித்தாய் எனக் கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்துபோன நான் அந்த 22 ஏக்கர் நிலத்தையும் எனது மகள் சோபனா பெயரில், கடந்த பிப்ரவரி 8 அன்று தானப் பத்திரமாக எழுதிக் கொடுத்து விட்டேன்.
தாக்குதல் - மருத்துவமனையில் சிகிச்சை
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி வாங்கல் வீட்டில் மதி யம் தனியாக இருந்த போது அங்கு வந்த முன்னாள் அமைச்சரின் அடியாட்கள், எனது மகளின் பெயரில் நான் எழுதி வைத்த செட் டில்மெண்ட் பத்திரங்களின் அசல் ஆவணங்களைக் கேட்டும், விஜய பாஸ்கர், அவரது குடும்பத்தார் மற்றும் என் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் போடப்பட்ட வழக்கை முழுமையாக ஏற்றுக் கொள்ளுமாறும் கூறி என்னை தாக்கினர்.
இதில் காயமடைந்ததால் கரூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட் டேன். இந்த சமயத்தில், நான் மருத்துவமனையில் இருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடன் இருக்கும் பலரும் சேர்ந்து எனது மகள் சோபனா மற்றும் மனைவி சசிகலாவை மிரட்டி, நான் எனது மகள் சோபனா வுக்கு எழுதிக் கொடுத்த தானப் பத்திர சொத்துகளை, எனது மகள் சோபனாவிடமிருந்து ஏப்ரல் 6 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், தேவராஜ் மகன் ரகு, ஈரோடு மாவட் டம் முத்துச்சாமி மகன் சித்தா ர்த்தன், கரூர் மாவட்டம் நாச்சியப்பன் மகன் மாரப்பன், செல்லமுத்து மகன் செல்வராஜ் ஆகியோர்க ளின் பெயரில் மோசடியாக ஒரு கிரைய பத்திரம் தயாரித்து, மேலக் கரூர் சார்பதிவாளர் அலுவல கத்தில் பதிவு செய்துள்ளனர்.
போலி ஆவணம் மூலம்...
எனது மகள் சோபனாவுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட செட்டில் மெண்ட் பத்திரத்தின் அசல் என்னி டம் இருந்த நிலையில், அந்த ஆவ ணங்கள் தொலைந்து விட்டதாக வும் அந்த ஆவணங்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் சொல்லி, சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாக பொய்யான ஆவணத்தை தயார் செய்து கரூர், மேலக்கரூர் சார் பதிவாளரிடம் கொடுத்து பத்திரம் தயார் செய் துள்ளனர்.
இதைப் பற்றி அறிந்த நான், உட னடியாக மே 11 ஆம் தேதி கரூர், மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், “அசல் ஆவணங் கள் என்னிடம் உள்ளது, போலி யான ஆவணம் கொடுத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து, அசல் ஆவணங்களை கிரையம் பெற்ற நபர்களிடம் ஒப்ப டைக்க கூடாது” என்று சொல்லி மனு கொடுத்தேன்.
உயிருக்கு ஆபத்து...
இதுகுறித்து அறிந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 10 பேர் என்னை கடத்திச் சென்று தாக்கினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அரசியல் பலம் மற்றும் பண பலம் படைத்தவர்களாக இருந்ததால் பயத்தில் நான் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தேன்.
எனது உயிருக்கு எந்த நேரத்தி லும் ஆபத்து நேரிடலாம் என்பதால், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, என்னையும் எனது குடும்பத்தாரை யும் காப்பாற்றி, அவர்கள் ஏமாற் றிய சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் அமைச்சர் மீது நில மோசடி புகார் எழுந்துள்ளதை தொ டர்ந்து கரூர் அரசியல் வட்டாரத் தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.