அருமனை, ஜூன் 4- கன்னியாகுமரி மாவட் டம் மேல்புறம் ஒன்றியம் மரு தன்கோடு ஊராட்சிக்கு உட் பட்ட செம்மங்காலை பகுதி யில் தரமற்ற சாலை அமை த்த அதிகாரிகளை முற்று கையிட்டு பொதுமக்கள் போ ராட்டம் நடத்தினர். புதிய சாலை அமைப்பதாக அதி காரிகள் வாக்குறுதி அளித்த னர்.
செம்மங்காலை முதல் பரக்குன்று வரை சானல் கரையோரமாக செல்லும் சாலையில் பி.எம்.ஜி.எஸ்.ஒய் - 3 திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்கப்பட்டது. சுமார் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணி ஒரு மாதம் முன்பு முடிந்தது. ஒரே மாதத்தில் தார் பெயர்ந்து சாலையை பயன்படுத்த முடி யாத அளவு சேதம் ஏற்பட்டுள் ளது. இதனால் சுமார் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் அரசு பணம் விரயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதற்கு காரணமான ஒப்பந்த தாரர், பொறியாளர், அரசு அதிகாரிகள் பார்வையிட வந்த அதிகாரிகளின் வாக னத்தின் முன்பு பொது மக்களும் விவசாயிகள் சங்கத்தினரும் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னார்கள்.
இப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.வின்சென்ட் தலைமை தாங்கினார். மலை யடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரின்ஸ், அருள் தாஸ், கிறிஸ்துதாஸ் மற்றும் மருதன்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்வின், நேசமணி, செல்வதுரை ராஜ், தேவராஜ், அஜின், காமராஜ் உட்பட ஏராள மான பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதி காரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் புதிய தார்ச் சாலை அமைத்து தருவதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.