நாகர்கோவில், மார்ச் 30- கன்னியாகுமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி மின்வாரிய அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று (மார்ச் 29) நள்ளிரவு வரை 7 மணி நேர போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபுரம் பகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக பெருங்குடி மின்வாரிய அலுவ லகம் செயல்பட்டது. இந்த அலுவலகத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள காற்றாலைகள், குமாரபுரம் , கண்ணப்பர் நல்லூர் போன்ற சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மின் நுகர்வோர் பயன் பெற்று வந்த னர். அண்மையில் முன்பு இந்த மின்வாரிய அலுவலகம், அருகிலுள்ள நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதிக்கு மாற்ற உள்ளதாக தகவல் பரவியது. அலுவல கத்தை மாற்ற பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அலுவலகம் மாற்றப்படாது என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிலையில் செவ்வாயன்று அலுவல கத்தில் இருந்த கணினி மற்றும் முக்கிய ஆவ ணங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. தகவல் அறிந்ததும் பேரூராட்சி மன்ற தலை வர் முத்துக்குமார், துணைத்தலைவர் சுதா ,அந்தப்பகுதி கவுன்சிலர் ஸ்ரீதேவி மற்றும் ஏனைய கவுன்சிலர்கள் ,பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அலுவலகம் முன்பு பணியாற்றும் இளநிலை பொறியா ளரை முற்றுகையிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே செல்லவிடாமல் போராட்டம் நடத்தி வந்தார்கள். நேரம் ஆக ஆக அதிகாரிகள் தரப்பில் யாரும் வராமல் காலதாமதம் செய்ததால் போராட்டக்காரர்கள் சம்பவ இடத்திலேயே உணவு சமைத்து இரவு சாப்பிட்டனர். நாகர்கோவில் டவுன் டிஎஸ்பி நவீன்குமார் ,பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நெல்லை மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இள நிலைப் பொறியாளரை விடுவித்தனர். போராட் டக்காரர்கள் 7 மணிநேர போராட்டத்தை கை விட்டு நள்ளிரவில் கலைந்து சென்றார்கள்.