கடலூர், பிப். 8- குடிமனைப் பட்டா கேட்டு விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. பாய், தலையணை யுடன் பொதுமக்கள் கலந்து கொண்ட னர். இருளக்குறிச்சி பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி விருத்தாசலம் வட்டாட்சியார் அலுவ லகத்தில் குடியேறும் போராட்டம் வட்டச் செயலாளர் என்.எஸ். அசோ கன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கலைச் செல்வன், கிளைச் செயலாளர்கள் ஜி.வேலன், கே.முருகவேல், பி.வீர மணி, எஸ்.சாமிதுரை கே.பாலாஜி, கல்யாணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து, போராட்டக்குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில்,“ வட்டாட்சியர் பயனாளிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான பட்டியல் இரண்டொரு நாளில் ஒட்டப்படும் என்றும் அதிகாரி கள் உறுதியளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்து கலைந்து சென்றனர்.