கடலூர், நவ,18- விருத்தாசலம் வட்டத்தில் மனு கொடுத்த ஓராண்டாகியும் பட்டா வழங்காதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாரா ட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் வட்டத்திலுள்ள முகுந்தநல்லூர், கோ.ஆதனூர், கோ. பொன்னேரி, ஊமங்கலம், சின்னவட வாடி, புதுப்பேட்டை, இருளக்குறிச்சி, சேப்ளாநத்தம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிமனைப் கேட்டு ஓராண்டுக்கு முன்பு சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் பட்டா வழங்க வில்லை. இதனையடுத்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் வெள்ளியன்று (நவ. 18) விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவல கத்தில் பெட்டி, படுக்கை யோடு குடி யேறும் போராட்டத்தை துவக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாராட்சியர் கட்சித் தலைவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 45 நாட்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பை யன், வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், நகரச் செயலாளர் ஆர்.கலைச்செல்வன், வட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.சந்திரசேகரன், ஆர்.ஜீவானந்தம், கே.எம்.குமர குரு, யூ.சுந்தர வடிவேல், ஆர்.இளங்கோவன், எஸ். ெஜயமணி, கே.அன்புச்செல்வன், ஆர்.மாரிமுத்து, எம். ஜெ.நெல்சன், விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ஆர்.கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.