சிதம்பரம், டிச 5- சிதம்பரத்திலுள்ள ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் விடுதி இயங்கி வருகிறது. இதில் திங்க ளன்று(டிச.5) காலை உணவு அருந்திய மாணவிகளில் 15 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உட னடியாக சக மாணவிகளின் உதவி யோடு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் செவிலியர் மாணவிகள் அனைவரும் ஊர்வலமாக சென்று துணைவேந்தரிடம் புகார் அளித்தனர். பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதியை சந்தித்தனர். இதையடுத்து, முதல்வர் திருப்பதி சம்பந்தப்பட்ட விடுதி உணவு ஒப்பந்ததாரரை நீக்கம் செய்து விட்டதாகவும், இனி மேல் உணவில் எந்த குறைபாடும் இல்லாமல் வழங்கப்படும் என உறுதியளித்தார்.