சிதம்பரம், ஆக 2- இலங்கை தமிழர்க ளுக்கு காட்டுமன்னார் கோயிலில் ரூ.3.60 கோடி யில் புதிதாக வீடுகள் கட்டும் பணியை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாகக் காட்டு மன்னார்கோயில் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக 300 சதுர அடிகொண்ட ஓடு பதித்த தரைதளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்டதொகுப்பு வீடுகளாக 18 தொகுப்பு களை கொண்டு தலா ரூ5 லட்சம் வீதம் 72 வீடுகள் ரூ. 3.60 கோடிமதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இத்து டன், தேசிய ஊரகவளர்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாமிற்கு செல்வ தற்குரூ.15.15 லட்சத்தில் இணைப்பு சாலையும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி யில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி யில் காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், திட்ட இயக்கு நர் பவன்குமார் ஜி.கிரியப்ப னார். வருவாய் கோட்டாட்சி யர்கள் கடலூர் அதிய மான்கவியரசு, சிதம்ப ரம் ரவி, மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வருவாய் துறையினர் கலந்துகொண்டனர்.