உதகை, ஜூன் 4– பள்ளி வாகன இயக்கத்தில் விதி மீறல் கண்டறியப்பட்டால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
நீலகிரியில், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாக னங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில் கோத்தகிரி மற் றும் உதகையில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், வாகனங்களின் பதிவு சான்று, காப்பு சான்று, அனுமதி சீட்டு, ஓட்டுநர் உரி மம், நடத்துநர் உரிமம், ஊர்தி இயக்கப் பதி வேடு, நடப்பில் உள்ள முதலுதவி பெட்டி, அவ சர கால வழி, தீயணைப்பு கருவி மற்றும் ஆவணங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என, ஆய்வு செய்யப்பட்டது. குறைபாடு இருந்த வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில், திங்களன்று உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட் டார போக்குவரத்து அலுவலர் தியாகரா ஜன் தலைமையில், பள்ளி நிர்வாகத்தினர் பங் கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், பள்ளி வாகனத்தில் அனைத்து பாதுகாப்பு அம்சங் களும் சரியாக இருக்க வேண்டும். அதை பள்ளி நிர்வாகம் தினமும் கண்காணிக்க வேண்டும். என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் குறைபாடு ஏதாவது இருந்தால் ஓட்டுநர் உட னடியாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். வாக னத்தில் உதவியாளர் இல்லாமல் செல்ல கூடாது. விதி மீறல் கண்டறியப்பட்டால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும்.’’ என்றார்.