உதகை, ஜூன் 15- கல்லட்டி மலைப்பாதையில் விபத்து களை தவிர்க்கும் வகையில், கொண்டை ஊசி வளைவுகளில் குவிலென்ஸ் கண் ணாடிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே தலை குந்தாவிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டியுள்ளதால் காட்டுயானை, கரடி, காட் டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்கு கள் நடமாட்டம் உள்ளது. இதனால் முது மலை புலிகள் காப்பகம் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். கல்லட்டி மலைப்பாதை 36 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் செங்குத்தான சாலைகளை கொண்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். எனவே, வாகனங் களை மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது. இதையும் மீறி கல்லட்டி மலைப் பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வெளி மாநில, மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இந்த மலைப்பாதை யில் செல்ல தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் அவசர வாகனங்களுக்கும், மசின குடி வழியாக உதகை வருவதற்கு மட்டும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு பின்ன ரும் அவ்வப்போது அந்த பகுதியில் விபத்து கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதன் படி விபத்துகளை தடுக்க அந்த சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற் போது கல்லட்டி மலைப்பாதையிலுள்ள 36 கொண்டை ஊசி வளைவுகளிலும் எதிரே வரும் வாகனங்கள் நன்றாக தெரிவதற்காக குவிலென்ஸ் பொருத்தும் பணிகள் தீவிர மாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் தனி யார் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரு வதாகவும், விரைவில் முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.