ஈரோடு, மார்ச்.1- ஈரோட்டில், மண்டல அளவிலான அரசு ஐடிஐ விளை யாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சி யர் ராஜ கோபால் சுன்கரா கடந்த 29ஆம் தேதி போட்டி களைத் தொடங்கி வைத்தார். இதில் கால்பந்து, கைப்பந்து, வலைப்பந்து, பூப்பந்து போட்டிகள், ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டு தல், உயரம் தாண்டுதல் போன்றவை இடம் பெற்றன.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், ஆகிய மாவட் டங்களிலிருந்து 12 அரசு மற்றும் 32 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களிலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மண்டல பயிற்சி இணை இயக்குநர் பி.முஸ்தபா, ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வராஜ், நிர்வாக அலுவலர் ஜீவா, பணியமர்த்தும் அலுவ லர் மு.சீனிவாசன் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்வில் பங்கேற் றனர். வெள்ளியன்று போட்டிகள் நிறைவு பெற்று பரிச ளிப்பு விழா நடைபெற்றது.