districts

img

ஈரோடு: ஆவணப்படங்கள் வெளியீடு

ஈரோடு, டிச.28- ஈரோட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் ஈரோடு தமுஎகச-வின் தேடல் திரைப்படச் சங்கம் இணைந்து, இரு ஆவணப்படங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஈரோடு செங்குந்தர் பள்ளிக் கலைய ரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் ஈரோடு தேடல் திரைப்படச் சங்கம் சார்பில் சனங்களின் சாமி, தோல் பாவைக் கூத்து ஆகிய இரு ஆவணப் படங்களின் வெளியீட்டு விழா ஞாயி றன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ந.சின்னை யன் தலைமை வகித்தார். தேடல் திரைப் படச் சங்கத்தின் தலைவர் பேரா.சு. பன்னீர்செல்வம் வரவேற்றார்.  இதையடுத்து “சனங்களின் சாமி” ஆவணப்படத்தை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வெளி யிட, தேடல் திரைப்படச் சங்கத் துணைத் தலைவர் கி.சிதம்பரன் பெற்றுக் கொண் டார். “தோல்பாவைக் கூத்து” ஆவணப் படத்தை முன்னாள் அமைச்சர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் வெளியிட, தமுஎகச மாவட்டத் துணைத்தலைவர் இரா.முரு கேசன் பெற்றுக் கொண்டார்.  முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மறைந்த தமுஎகச-வின் மாநில துணைச் செயலாளர் கருப்பு கருணா, எழுத்தா ளர் தொ.பரமசிவன் மற்றும் தில்லி போராட்டத்தில் இன்னுயிர் நீத்த விவ சாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட் டது. இந்நிகழ்வுகளில், தமுஎகச மாவட் டத் துணைச் செயலாளர் இ.கலைக் கோவன், மாவட்ட செயலாளர் மு.சங்க ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;