இராமநாதபுரம், ஜூன் 9 இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் ஆப்பனூர் அருகே வேப்பங்குளம் வருவாய் கிராமத்தில் உள்ள மலட் டாற்றில் மணல் கடத்தல் கடந்த சில நாட்களாக நடை பெற்று வருகிறது.
இத்தகவல் அறிந்த தணிக்கை மண்டல துணை வட் டாட்சியர் சத்தியசீலன் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கந்தசாமி மற்றும் போலீசார் -கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மணல் கடத்தல் பகுதிக்கு சென்று திடீ ரென ஆய்வு செய்தனர். இத்தகவல் அறிந்த மணல் கடத்தல் கும்பல் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் அப்பகுதியில் மண்வெட்டி, குடம்- அரிவாள் போன்ற பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.