districts

img

கடல் அட்டை மீனவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க சிஐடியு வேண்டுகோள்

இராமநாதபுரம், மே 29- கடல் அட்டை மீன்பிடிப்பு பாரம்பரிய முறையில் கடலில் மூழ்கி தொழில் செய்யும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்; தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய தலையீடு செய்து மீனவர்களை பாது காக்க வேண்டும் என தமிழ்நாடு  மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு  (சிஐடியு) சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டமைப்பின் மாநில செயல் தலைவர் எம்.கருணா மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பல்வேறு கார ணங்களால் நசிவுக்குள்ளாகி இருப்ப தால் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழும் நாட்டுப்படகு, சிறுதொழில் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொடர இயலாமல் மிகப்பெரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

இழு வலை பயன்படுத்தும் விசைப்படகுகள் தற்போது மீன் பிடிப்பில் ஈடுபடுவது தடை செய்யப் பட்டுள்ள சூழலில், பாரம்பரிய முறை யில் மீன்பிடிப்பில் ஈடுபடும் நாட்டுப் படகு மீனவர்களில் ஒரு சிறு பகுதி யினர் தங்கள் வறுமை காரணமாக நீண்ட நெடுங்காலமாக தாங்கள் செய்து  வரும் கடல் அட்டை மீன்பிடிப்பில், அது வும் கண்ணாடி அணிந்து கடலில் மூழ்கிப் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்தச் சூழலில் கடல் அட்டை தடை செய்யப்பட்டுள்ளது என்ற கார ணத்தை மையப்படுத்தி வன உயிரின பாதுகாப்புத் துறை இவர்களைக் கைது செய்வது போன்ற நடவடிக்கையை சமீப காலமாக மிக தீவிரமாக அமல் படுத்தி வருகிறது. இதுகுறித்து அரசும், மீன்வளத்துறை, வனத்துறை உள்ளிட்ட நிர்வாகங்கள் பரிசீலிக்க வேண்டும்.

தடையாணையை விலக்குக!
கடல் அட்டை மீன்பிடிப்பு மீதான தடை ஆணை நீக்கப்பட வேண்டும் என்பது மீனவர்களின் பொதுவான கோரிக்கையாக இருந்தாலும் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தடை யாணை விலக்கி கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து போராடிவருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு இராம நாதபுரம் மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக நடத்த முடிவு செய்து அத னடிப்படையில் திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, தேவிபட்டிணம் என  மூன்று மீனவ கிராமங்களில் போராட்டங் கள் நடத்தப்பட்டது. 

கடல் அட்டை மீன்பிடிப்பு பாரம்பரிய முறையில் கடலில் மூழ்கி தொழில் செய்யும் நாட்டுப்படகு மீன வர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், அதற்கான லைசென்ஸ் மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் மீனவர்கள் கருத்தறிந்து அது எந்தெந்த மாதங் களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்ய கோரி யிருந்தோம்.

மேலும் கடல் அட்டை பாதுகாக்கப் பட வேண்டிய மீன் இனம் என்பதால், அதனை, இழு வலை பயன்படுத்தும் விசைப்படகுகள் பிடிப்பது முற்றாக தடுக்கப்பட வேண்டும்.

தொழில் ஒழுங்கு முறைகளுடன்...

உலகில் பல நாடுகளில் கடல் அட்டை மீன்பிடிப்பானது சில கட்டுப் பாடுகளுடன் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதில் 7 சென்டி மீட்டருக்கு குறைவான கடல் அட்டைகளை பிடிக்கக் கூடாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே இது போன்ற தொழில் ஒழுங்குமுறைகளுடன் இந்த மீன் பிடிப்பு அனுமதிக்கப்பட வேண்டும். இச்சூழலில் தற்போது நாட்டுப்படகு மீனவர்களை மட்டும் குறிவைத்து நட வடிக்கை மேற்கொள்ளும் வன உயிரின பாதுகாப்புத் துறையும், கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்புக் குழுமம் உள்ளிட்ட நிர்வாகங்களும் கடல் அட்டை இனத்தையே முற்றாக அழிக்கும் வகையில் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகள் மீது கடுமை யான நடவடிக்கை மேற்கொள்ளாதது இந்த துறைகளின் நேர்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

மீனவர்கள் சிறைவாசம்...

கடந்த மாதம் திருவாடானை தாலுகா முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் வன உயிரின பாதுகாப்புத் துறையின் கைது நடவடிக்கைக்குள்ளாகி ஒரு வாரம் வரை சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

தற்போது மீண்டும் மண்டபம் பகுதியில் கீழக்கரை, வேதாளை, பெரிய பட்டிணம் பகுதி சார்ந்த மீன வர்கள் 7 பேர் கடலோர காவல்படை யால் கைது செய்யப்பட்டு வன உயி ரின பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக் கப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரி கிறது. 

எனவே தமிழக அரசு, மாவட்ட ஆட்சி யர், மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய தலையீடு செய்து கடல் அட்டை மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது.