districts

img

தில்லி பேரணியை விளக்கி இருசக்கர வாகன பிரச்சாரம்

அரியலூர், மார்ச் 5- மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை அகற்றிட வலியுறுத்தி ஏப்ரல் 5 அன்று தில்லியில் நடைபெறும் பேரணியை விளக்கி இந்தியா தொழிற்சங்க மையம் (சிஐடியு), விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் அரியலூரில்  இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே.கண்ணன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.தியாகராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.மீனா ஆகியோர் தலைமை வகித்தனர். பயணத்தை ஜெயங்கொண்டம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்டத் தலைவர் செந்தில்வேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, மாவட்டத்  தலைவர் கே.கிருஷ்ணன், மாதர் சங்க மாவட்டத் தலைவர்  பத்மாவதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சூரியமணல் கிராமத்தில் தொடங்கிய இருசக்கர வாகன பிரச்சார பயணம் மீன்சுருட்டியில் நிறைவடைந்தது.