districts

img

மோடி என்ற மாயையை அடித்து நொறுக்கிய மக்கள்மோடி என்ற மாயையை அடித்து நொறுக்கிய மக்கள்

அரியலூர், ஜூன் 4- இந்தியா முழுவதும் மோடி  என்ற மாயையை, இந்தத் தேர்த லில் மக்கள் நொறுக்கியுள்ளனர் என வி.சி.க. தலைவர் தொல். திரு மாவளவன் தெரிவித்துள்ளார்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண் ணிக்கை மையமான அரியலூர் எம்.ஆர்.சி கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் விசிக வேட்பாளர்  திருமாவளவன் 12-ஆவது சுற்றில், 68 ஆயிரத்து 238 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 

இந்நிலையில் செய்தியாளர் களை சந்தித்த அவர், “தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே கணித்தபடி 40-க்கு 40 வெற்றி உறுதியாகிவிட் டது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி 225 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. சென்ற முறை பாஜக தனிப் பெரும்  பான்மை பெற்று ஆட்சி அமைத் தது. மோடி ஒரு மாயை; அது உண்மை அல்ல என மக்கள் தெரி வித்துள்ளனர்.

அதனால் அதிகப் பெரும்பான் மையைப் பெற முடியாத நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணி, மக்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறது. இன்னும் பல சுற்றுகள் என்ன வேண்டியுள்ளது; அது எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.

விழுப்புரம், சிதம்பரம் இரண்டு  தொகுதிகளிலேயும் மக்கள் எங்க ளுக்கு வாக்களித்து, தமிழகத்தில் ஓரு அங்கீகாரத்தை வழங்கி உள்ள னர். மாநில கட்சி என்ற அந்தஸ்தை  பெற, ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளனர். அவர்களுக்கு நன்றி.  யாருக்கும் அறுதிப் பெரும் பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் முடிவு, குதிரை பேரத்திற்கு  வழி வகுத்துள்ளது இது அச்சத்தை  ஏற்படுத்துகிறது.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகி லேஷ் யாதவ் முன்நின்று ஏற்பாடு களைச் செய்வார்கள் என நினைக்கி றேன்” என்று கூறினார்.

;