districts

மைக்கேல்பட்டி பள்ளி பிரச்சனையில் விஷம் கக்கிய விஎச்பி செயலாளர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

அரியலூர், மார்ச் 19- விஷ்வ இந்து பரிஷத் அரியலூர்  மாவட்டச் செயலார் பி.முத்துவேலுவை (38) குண்டர் சட்டத்தின் கீழ் சிறை யிலடைக்க காவல்துறைக் கண்கா ணிப்பார் கே. பெரோஸ்கான் அப்துல்லா அளித்த பரிந்துரையை ஏற்று ஆட்சியர் பி.ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார். திருச்சிராப்பள்ளியில் உள்ள லூர்து மாதா திருச்சபையின் பாதிரியார் டொமினிக் சாவியோ அளித்த புகாரின் பேரில், மிரட்டி பணம் பறித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார் முத்து வேல். இந்தநிலையில் அவர் மீது  சனிக்கிழமை குண்டர் சட்டம்பாய்ந்தது.  முத்துவேல் ரூ.25 லட்சம் கேட்டதாக வும், பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்துவதாகக் கூறி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவ தாக பாதிரியார் குற்றம் சாட்டியுள்ளார். புகாரின் அடிப்படையில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 153 (கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் தூண்டுதல்), 153 ஏ (மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகையை ஊக்கு வித்தல்) 298 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். (மத உணர்வு களைப் புண்படுத்தும் வார்த்தை களைப் பேசுதல்), 389 (ஒரு நபரை மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்சாட்டி ற்கு பயப்பட வைப்பது), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பு), 505 (i) (b) (பயம் அல்லது எச்சரிக்கை அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் பொது), மற்றும் 505 (i) (c) (ஒரு சமூகத்தை குற்றம் செய்ய தூண்டுதல்). பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விஷ்வ இந்து பரிஷத் பி.முத்து வேல், 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளி விடுதியில் 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதை அரசியலாக்கியதில் முத்துவேல் முக்கியப் பங்காற்றினார். சிறுமி சிகிச்சையில் இருந்தபோது வீடியோ எடுத்தார். மருத்துவமனையில், தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார், அந்த குற்றச்சாட்டை பள்ளி கடுமையாக மறுத்தது. இதையடுத்து அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முத்துவேல் மீது மேலும் சில வழக்கு கள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.