districts

மருத்துவ மதிப்பீட்டு முகாம்

அரியலூர், ஏப்.20 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட  அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செவ்வா யன்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை  வகித்தார். முகாமில் தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றி யத்திற்குட்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாண வர்களுக்கு காது கேட்கும் கருவி, சக்கர நாற்காலி, செயற்கை  கை மற்றும் கால்கள் ஆகிய உபகரணங்கள் வழங்குவதற்கு மருத்துவ மதிப்பீடு செய்யப்பட்டது.