அரியலூர், ஜன.4- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய அன்பகம் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குறைபாடு உடைய பெண்கள் தொழில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க மருத்துவர் கோயன் வான் ராம்பே, பெல்ஜியம் சகாயா இண்டர்நேஷனல் நிறுவனம் வெர்லி மற்றும் ராபின் ஆகியோர் தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகையை முன் னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இதில் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேட்டி சேலை அணிந்து பொங்கல் வைத்து கும்மி அடித்து பொங்கல் பண்டி கையை கொண்டாடினர்.