அரியலூர், ஜன.5- பொங்கல் பண்டி கைக்கு குடும்ப அட்டைதா ரர்களுக்கு பொங்கல் பரி சுடன் செங்கரும்பு வழங் கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை யொட்டி அரியலூர் மாவட் டத்தில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள வயல்களை மாவட்ட ஆட்சி யர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார். அப்போது செங்கரும்பு சாகுபடி செய்வதற்கான செலவு கட்டுப்படியான விலை குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும் செங் கரும்பின் உயரம் குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சி யர், கொள்முதல் செய்யப் படும் செங்கரும்பிற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே வர வைக்கப்படும் என விவசாயி களிடம் தெரிவித்தார்.