districts

விளைநிலங்களுக்கு செல்ல பாதை வசதி கோரி கரடிக்குளம் கிராம மக்கள் போராட்டம்

அரியலூர், மார்ச் 13 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்திலிருந்து சூசையப்பர்பட்டினம் வழியாக சூரியமணல் செல்லும் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை (பைபாஸ்) சாலை பணி நடைபெற்று வருகிறது. இதில் கரடிகுளம் கிராம மக்கள் விளைநிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தராமல் பணி நடைபெறுவதால் கரடிகுளம் கிராம மக்கள் வேலையை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தங்களின் விளைநிலங்களுக்கு சென்று திரும்ப சாலை வசதி கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், சாலைப் பணியை தடுத்து நிறுத்தி ரோடு காண்ட்ராக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  விளைநிலங்களுக்கு செல்ல தற்போது போட்டுள்ள நீர்வரத்து மதகை அடைத்துவிட்டு கரடிகுளத்தில் இருந்து வயல்வெளிக்கு செல்ல நேரடியாக பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.