அரியலூர், மார்ச்.10- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவ ருமான உத்திராபதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங் கடாசலம் தலைமையில் மாநில பொது குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை கியாம் கட்சி எம்எல்ஏவுமான சின்னதுரை நேரில் சென்று உத்திராபதியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் மாவட்டச் செயலாளர் இளங்கோ வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், மகாராஜன், டி.அம்பிகா, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ், பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கலையரசி, மாதர் சங்க மாவட்ட செய லாளர் பி.பத்மாவதி, ஒன்றிய செயலா ளர்கள் வி.பரமசிவம், (ஆண்டிமடம்), துரை அருணன் (அரியலூர்), அர்ச்சுணன் (செந்துறை), ஜெ.ராதாகிருஷ்ணன் (தா. பழூர்) மற்றும் மாவட்ட குழு, ஒன்றியக் குழு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பி னர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.