court

img

நீதித் துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு அபராதம் !

சென்னை,மார்ச் 9- நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண் ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இமாச்சல பிரதேச தோட்டக் கலை நிறுவனம் சார்பில் தஞ்சாவூ ரில் இமாச்சல் ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறுகளின் விற்பனை மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் விற்பனையாளராக  ஜெஸ்ஸி ஃப்ளா ரன்ஸ் என்பவரை ஒப்பந்த அடிப் படையில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், எவ்வித முன்னறி விப்புமின்றி 2013 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று ஜெஸ்ஸியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து இமாச்சல பிரதேச தோட்டக்கலை நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெஸ்ஸி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தள்ளுபடி செய்து உத்தர விட்டது. இந்த உத்தரவு பிறப்பிக் கப்பட்ட 20 நாட்களில், அதே கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் ஜெஸ்ஸி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி பதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மதுரை  கிளையில் வழக்கு தள்ளுபடியா னதை மறைத்து, அதே கோரிக்கை யுடன் சென்னையில் வழக்கு தொடர்ந் திருப்பதை ஏற்க முடியாது.  நீதித் துறை நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக கூறி, 50 ஆயிரம் ரூபாய்  அபராதத்துடன்  ஜெஸ்ஸி ஃப்ளா ரன்ஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை 2 வாரங்களுக்குள் உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும் எனவும், அது குறித்து மார்ச் 23 ஆம் தேதி நீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டு மெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

;