court

img

‘இந்திய எதிர்ப்புக் குழு’வில் சில நீதிபதிகளும் இருக்கிறார்களாம்!

அரசியலமைப்பு உருவாக்கத்தில்  நீதித்துறைக்கு எந்த பங்களிப்பும் இல்லை : ஜகதீப் தன்கர் சொல்கிறார்

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ‘பி.எஸ். ராமமோகனராவ் நினைவலைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, தில்லியில் ஞாயிறன்று நடைபெற்றது.  இதில், நூலை வெளியிட்டு, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் உரையாற்றியுள்ளார். அப்போது, “அரசியலமைப்பு என்பது மக்களிடம் இருந்து, நாடாளுமன்றம் வழியாக வர வேண்டும். இதில் நிர்வாகத்துக்கு எந்த பங்கும் கிடையாது. அரசியலமைப்பை உருவாக்குவதில் நிர்வாகத்துக்கோ, நீதித்துறை உள்ளிட்ட பிற அமைப்புகளுக்கோ எந்த பங்களிப்பும் இல்லை. அரசியலமைப்பின் பரிணாம மாற்றம் என்பது நாடாளுமன்றத்தில்தான் நடைபெற வேண்டும். அதில் வேறு எந்த உயரிய அமைப்பும் வர முடியாது. அது நாடாளுமன்றத்துடன்தான் முடிய வேண்டும்” என்று பேசியுள்ளார். அண்மைக் காலமாகவே, ஜகதீப் தன்கரும், கிரண் ரிஜிஜூவும் நீதித்துறையை குறிவைத்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

கிரண் ரிஜிஜு அலறல்; மீண்டும் நீதித்துறை மீது பாய்ச்சல்

புதுதில்லி, மார்ச் 21- “இந்திய எதிர்ப்புக் கும்பலின் ஒரு பகுதி போல் சில நீதிபதிகள் செயல்படுகின்றனர்” என ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிரங்கமாக நீதித்துறை  மீது பாய்ந்துள்ளார். “இந்திய எதிர்ப்பு கும்பலின்’ ஒரு பகுதியாக இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதித்துறை யை எதிர்க்கட்சியாக நடிக்க வற்புறுத்துகிறார் கள்” என்றும், “சமீபத்தில்  ீதிபதிகளின் பொறுப்புக் கூறல் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது; ஆனால் முழு கருத்தரங்கும், அதிகாரம் (அரசாங் கம்) நீதித்துறையை எப்படி பாதிக்கிறது என்றே பேசியது” என்றும் ஆத்திரம் அடைந்துள்ளார். ‘இந்திய அரசியல்’ குறித்து தில்லியில் ‘இந்தியா டுடே’ சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசுகையிலேயே கிரண்  ரிஜிஜு இவ்வாறு பேசியுள்ளார். “நீதித்துறை நடுநிலையானது மற்றும் நீதிபதி கள் எந்தக் குழுக்கள் அல்லது அரசியல் சார்பு களின் பகுதியாக இல்லை. ஆனால், இந்திய நீதித்துறை (அரசாங்கப் பிரச்சனைகளில்) தலை யிட வேண்டும் என்று இவர்கள் (எதிர்க்கட்சிகள்) எப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியும்?”

“யாராவது, அது ராகுல் காந்தியோ அல்லது வேறு யாரேனுமோ இந்திய நீதித்துறை அப கரிக்கப்பட்டு விட்டது அல்லது நாட்டில் ஜனநாய கம் முடிந்துவிட்டது. நீதித்துறை இறந்து விட்டது என்று சொன்னால், அதன் அர்த்தம் என்ன?  இப்படித்தான் இந்திய நீதித்துறையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால்தான், இந்திய நீதித்துறையை அரசாங்கம் கையகப் படுத்த முயற்சிப்பதாக அவர்கள் நாளுக்கு நாள்  கூற முயல்கின்றனர்.  என்னிடம் இப்போது சில பெயர்கள் உள்ளன, ஒவ்வொரு பெயருக்கும் சக நீதிபதிகள், பொதுமக்கள், சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர் கள் மூலம் நிறைய புகார்கள் உள்ளன. நான் அதை பகிரங்கப்படுத்தவில்லை. ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்கு எதிராக எதிர்மறையான கருத்தை  எழுதியிருந்தால், அதை நான் பகிரங்கப்படுத்தக் கூடாது. பொது வாழ்வில் கொஞ்சம் நன்னடத்தை இருக்க வேண்டும் என்று நான்கருதுகிறேன். ஆனால், சில நீதிபதிகள் ஆர்வலர்களாகவும், எதிர்க்கட்சிகளைப் போல நீதித்துறையை அரசாங்கத்திற்கு எதிராக மாற்ற முயற்சிக்கும் இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதியாகவும் உள்ளனர்.இவ்வாறு கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.

கபில் சிபல் குற்றச்சாட்டு

‘‘அரசாங்கம் நீதித்துறையை கைப்பற்ற முயற்சிக்கிறது. சட்ட அமைச்சருக்கு நீதிமன்றங் களின் செயல்பாடுகள் பற்றி நன்றாகத் தெரிய வில்லை. நீதிமன்ற நடைமுறைகள் பற்றி அவ ருக்குத் தெரியாது என்று நான் முன்பே  கூறியுள்ளேன். அதுபோல அனைத்து நிறுவனங் களும் அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுதந்திரத்தின் கடைசி கோட்டை நீதித்துறை. உயர் நீதித்துறைக்கு நீதிபதிகள் நியமனம் குறித்த இறுதி வார்த்தை அரசாங்கத்திடம் விடப்பட்டால், அவர்கள் இந்த நிறுவனங்களை, அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சியின் சித்தாந்தத்துடன் இணைந்த நபர்களால் நிரப்பு வார்கள்’’ என ஒன்றிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும், உச்ச நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்திருந்தார். இந்த பின்னணியிலேயே கிரண் ரிஜிஜூ மேற்கண்டவாறு பதிலளித்தார்.

டி.ஒய். சந்திரசூட் பதிலடி

இந்நிலையில், கிரண் ரிஜிஜூவுக்கு, தில்லி யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதிலளித்துள் ளார். அதில், ‘‘அனைத்து அமைப்புகளும் சரி யானவை அல்ல, ஆனால், இது நாம் உருவாக்கிய சிறந்த அமைப்பு. இதன் நோக்கம் நீதித்துறை யின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும், இது  ஒரு முக்கிய மதிப்பாகும். நீதித்துறை சுதந்திர மாக இருக்க வேண்டுமானால், நீதித்துறையை வெளிப்புற தாக்கங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். உணர்வில் வேறுபாடு இருப்பதில் என்ன தவறு? ஆனால், அத்தகைய வேறுபாடு களை நான் வலுவான அரசியலமைப்பு, அர சியல் உணர்வுடன் கையாள வேண்டும். நான் சட்ட அமைச்சருடன் பிரச்சனைகளில் ஈடுபட விரும்பவில்லை, கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். நான் நீதிபதியாக இருந்த 23 ஆண்டு களில் ஒரு வழக்கை எப்படி தீர்ப்பது என்று யாரும் சொல்லவில்லை. அரசாங்கத்திடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை. நீதித்துறைக்கு எந்த  அழுத்தமும் இல்லை என்பதற்கு தேர்தல் ஆணை யம் தொடர்பான தீர்ப்பு ஒரு சான்று’’ என்று குறிப்பிட்டுள்ளார்.