அரசியலமைப்பு உத்தரவாதத்திற்கு எதிரானது: சிபிஎம் விமர்சனம்
புதுதில்லி, மார்ச் 15- கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஹிஜாப் தீர்ப்பு சமத்துவத்திற்கான அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதங்களுக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. “ பாரபட்சமான கொள்கைகளை நீதித்துறை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருவரின் தலையை மறைக்க ஹிஜாப் அணிவது சீருடையை மீறுவதாக ஒருபோதும் கருதப்படவில்லை. உச்சநீதிமன்றம் நீதி வழங்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
பெங்களூரு,மார்ச் 15- கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறு வனங்களில் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்தது செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் மார்ச் 15 அன்று தீர்ப்பளித்தது. உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா வில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி யில் முஸ்லிம் மாணவிகள் வழக்கம்போல் ‘ஹிஜாப்’ அணிந்து வகுப்புக்கு வந்தனர். அக் கல்லூரி யின் முதல்வர், மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்து உத்தரவிட்டார். இதைக் கண்டித்து முஸ்லிம் மாணவி கள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மதவெறி நடவடிக்கைகளை தூண்டிவிடும் இந்துத்துவா கும்பலால் ஒரு பகுதி இந்து மாணவ-மாணவிகள் காவித் துண்டுகளை அணிந்து வகுப்புக்கு வந்தனர். இந்துத்துவா கும்பலின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டித்தன. ஹிஜாப் விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது. சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது.
இதனால் பள்ளி-கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. மதவெறி கும்பலின் நடவடிக்கைக்கு அடிபணிந்து மாநில பாஜக அரசின் பள்ளிக்கல்வித் துறை, ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் 18 பேர், ஹிஜாப் அணிய அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். முதலில் இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித், இதில் அரசியல் சாசனம் தொடர்பான விஷயங்கள் இடம்பெற்று இருப்பதாக கூறி, இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து, தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமை யில் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. இதில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த அந்த அமர்வு, மாணவர்கள் மத அடையாள ஆடை களை அணிந்து வகுப்புகளுக்கு வர தடை விதித்தது
ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கூடாது என்று கர்நாடக அரசு வாதிட் டது. ஹிஜாப் அணிந்து வருவது மத சுதந்திரம் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி, மனுதாரர்கள் சார்பில் தேவதத் காமத், ரவிவர்மகுமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ர வரி 25 ஆம் தேதி விசாரணை நிறை வடைந்தது. அன்றைய தினம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டது. இந்நிலையில் மார்ச் 15 செவ்வா யன்று இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், ஹிஜாப் அணிவது இஸ்லா மிய சட்டத்தில் அவசியமானது இல்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் . ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு எதிராக தொட ரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் அரசின் சீருடை சட்டத் திற்கு அனைவரும் உட்பட்ட வர்களே என்றும் உத்தரவிட்டது. ஹிஜாப் தடைக்கு எதிரான சரி யான முகாந்திரங்கள் எதுவும் மனுதாரர்களால் முன்வைக்கப்பட வில்லை. பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை, அனுமதிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியது. உமர் அப்துல்லா கருத்து ஹிஜாப் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று காஷ்மீர் முன் னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நீதி வழங்கவில்லை
இதுகுறித்து ஹிஜாப் அணிந்து வகுப்பறைகளுக்குச் செல்லும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் மாணவர் அமைப்பினர் கூறுகை யில், “உயர் நீதிமன்ற உத்தரவு தங் களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நீதி மன்றம் ஒரு தீர்ப்பை மட்டுமே வழங்கியதாக நாங்கள் உணர் கிறோம், ஆனால் நீதி வழங்கவில் லை. ஹிஜாப்பிற்கான எங்களது போராட்டத்தை சட்டரீதியாக உரிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடரு வோம்’’ என்று தெரிவித்தனர்.