அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை எனத் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அமலாக்கத்துறையினர் காவலுக்கு எடுக்க உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்றும், கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.