court

img

மணிப்பூர் கொடூரம்: 2 பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு!

மணிப்பூர் கலவரத்தில் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்கள், ஒன்றிய, மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர். இது தொடர்பான வீடியோ ஜூலை 19-ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையிலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு, வன்முறை நடந்து 84 நாட்களுக்கு பிறகு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், மணிப்பூர் கலவரத்தில் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்கள், ஒன்றிய, மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், தங்களை பற்றிய விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், மனுவில் தெரிவித்துள்ளனர்.