புதுதில்லி, நவ.16- நாடாளுமன்ற உறுப்பி னர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மீதான கிரி மினல் வழக்குகள் 21 சத வீதம் அதிகரித்துள்ளது என உயர்நீதிமன்றங்களி லிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் 4,122 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் 4,984 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா உச்சநீதிமன்றத்திற்கு அளித்துள்ள தகவலில் 1,899 வழக்கு கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலு வையில் உள்ளன. 1,475 வழக்குகள் இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை நிலுவையில் உள்ளது. 1,599 வழக்குகள் இரண்டு வருடங்களுக்குள்ளாக நிலுவை யில் உள்ளது. 2018-ஆம் ஆண்டு அக்டோ பர் மாதத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதி மன்றங்கள் 2,775 வழக்கு களைத் தீர்த்துவைத்துள்ளன. 1979-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு க்குள் 106 கிரிமினல் வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள் ளன. அவற்றில் 17 கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்புடையது. மகாராஷ்டிராவில் அதிக குற்ற வழக்கு கள் (482) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 169 வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப் பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது 454 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது ஒடிசா மாநிலத்தில் தான். கேரளா (384), மத்தியப் பிரதேசம் (329), தமிழ்நாடு (260), மேற்கு வங்கம் (244), கர்நாடகா (221), ஜார்க்கண்ட் (198), தில்லி (93), ஆந்திரப் பிரதேசம் (221), பஞ்சாப் (91). வழக்குகள் நிலுவையில் உள்ளன.