சென்னை, ஜூன் 24- குற்ற வழக்குகளில் புலன் விசாரணையை சரி பார்த்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசின் தலை மைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. கொலை வழக்கு ஒன்றில் விதிக்கப்பட்ட தண்ட னையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த, தீவிரமான குற்ற வழக்குகளில் சிறப்பு புலன் விசாரணை பிரிவை ஏன் ஏற்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு விளக்க மளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி கள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு டிஜிபி சார்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழ் நாட்டில் குறிப்பிட்ட 11 தாலுகாக்களில் மட்டும் தற்போது சிறப்பு புலன் விசாரணை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர குற்ற வழக்குகளில் உரிய காலத்தில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மற்ற தாலுகாக்களிலும் இந்த பிரிவுகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. டிஜிட்டல் ஆதாரங்க ளுக்கான விதிகளை வகுக்கும் நடைமுறைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. குற்ற வழக்குகளில் புலன் விசாரணை சரிபார்த்து, உரிய காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சமீபத்தில் அரசின் தலை மைச் செயலர் வெ.இறை யன்பு தலைமையில் நடந்த அரசு வழக்கறிஞர்கள் கூட்டத்திலும் அரசு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க குற்றப்பத்திரிகை குறித்து அரசு வழக்கறிஞர்கள் கருத்தைப் பெற வேண்டி யதில்லை என டிஜிபி சுற்ற றிக்கை அனுப்பியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், தீவிர குற்ற வழக்குகளை விசாரிப்ப தற்காக சிறப்புப் பிரிவு தொடங்குவதற்கான காவல் நிலையங்களை அடை யாளம் காண வேண்டும். டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்த விதிமுறைகளை வகுத்தது என்பது முக்கிய மானது என்பதால் அதில் அவசரம் காட்ட வேண்டாம் எனக் கூறி 4 வாரங்கள் அவகாசம் வழங்கினார். பின்னர் விசாரணையை ஜூலை 21-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.