திருப்பூர், ஜூலை 7– திருப்பூர் மகாலட்சுமி நகர் பள்ளிவாச லுக்கு தடையின்மைச் சான்று கோரும் முறை யீட்டின் மீது மாநில வீட்டுவசதித் துறை செய லர் ஜூலை 26ஆம் தேதிக்குள் முடிவெடுக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதுவரை பள்ளிவாசல் செயல்பட வும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகே மகாலட்சுமி நகரில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பள்ளிவாசல் மற்றும் மதரஸா அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் இந்த வழிபாட்டுத் தலம் செயல்பட தடையின்மைச் சான்று, கட்டிட அனுமதி பெற வில்லை என்று மகாலட்சுமி நகர் குடியிருப் போர் நலச் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. மேலும் இப்பிரச்சனையில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக் கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே பள் ளிவாசல் கட்டிடத்துக்கு தடையின்மைச் சான்று தர முடியாது என மறுப்புத் தெரி வித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் இப்பள் ளிவாசலை மூட உத்தரவிட்டார்.
எனவே கடந்த ஜூன் 30ஆம் தேதி மாநகராட்சி அதிகா ரிகள் இப்பள்ளிவாசலை சீல் வைக்க சென்ற னர். எனினும் இந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் இதற்கு எதிர்ப் புத் தெரிவித்தனர். திருப்பூரில் பல இடங்க ளில் அன்றைய தினம் பல மணி நேரம் மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதையடுத்து வக்பு வாரியத்தின் சார்பில் சென்னை உயர்நீ திமன்றத்தில் எஸ்.காஜா மொகைதீன் கிஸ்தி அவசர வழக்கு தாக்கல் செய்தார். இதை விசா ரித்த நீதிபதிகள் ஜூலை 4ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சீல் வைக்க தடை விதித்த னர். ஜூலை 5ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கு நீதிபதி கள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகி யோர் முன்னிலையில் விசாரணைக்கு வந் தது. அப்போது தமிழ்நாடு வக்பு வாரியம், மகாலட்சுமி நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பிலும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் தமிழ்நாடு வீட்டுவசதி மற் றும் நகர்ப்புற மேம்பாட்டுச் செயலரிடம் தடை யின்மைச் சான்று கோரி மேல் முறையீடு செய் திருப்பதாகவும், அவரது முடிவுக்கு கட்டுப்ப டுவதாகவும் உறுதிமொழி அளிக்கப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் ஜூலை 26ஆம் தேதிக்குள் வீட்டுவசதித் துறை செயலர் இந்த மேல் முறையீட்டின் மீது முடிவு எடுக் கவும், அடுத்த மூன்று நாட்களுக்குள்ளாக அந்த முடிவு விபரத்தை மகாலட்சுமி நகர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு தெரியப்படுத்தவும் நீதிப திகள் உத்தரவிட்டனர். அத்துடன் வீட்டுவசதித் துறை செயலர் உத்தரவு பிறப்பிக்கும் வரை இப்போதுள்ள பள்ளிவாசல் செயல்பட அனுமதி வழங்கும்ப டியும் வழக்கறிஞர் காஜா மொகைதீன் கிஸ்தி உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்து முறை யீடு செய்தார். எனவே வீட்டுவசதி துறை செயலர் மேல்முறையீட்டின் மீது முடிவெ டுக்கும் வரை, பள்ளிவாசல் வழக்கமான முறையில் செயல்படவும் நீதிபதிகள் அனு மதி வழங்கினர். அத்துடன் குடியிருப்போர் சங்கம் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடக்கி வைத்தனர்.