தான் ஓய்வுபெற்ற பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்கபோவதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் பேசிய தலைமை நீதிபதி கவாய், பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் சமீபத்தில் தெரிவித்த கருத்து, தவறாக குறிப்பிடப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
மேலும், நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் அரசுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேர்தலில் போட்டியிடுவது போன்ற செயல்கள், நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நான் ஓய்வுபெற்ற பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க ஏற்கபோவதில்லை என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.