court

img

உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை,அக்.16- சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கூடுதல் நீதி பதிகள் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக வழக்கறி ஞர்கள் செந்தில்குமார், அருள்முரு கன் ஆகியோரை நியமித்து குடியர சுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 13 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப் பட்ட இருவரும் 2 ஆண்டுகள் பணி யாற்றுவார்கள் எனவும் அந்த உத்தர வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செந்தில்குமார், அருள்முருகன் ஆகிய இருவரும் திங்களன்று (அக்.16) சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். இவர்கள் இருவருக்கும் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் உயர் நீதி மன்ற நீதிபதிகள் உடன் இருந்தனர். கூடுதலாக 2 நீதிபதிகள் பதவியேற்ற தன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.