சென்னை, பிப்.20- அன்பு ஜோதி ஆசிரம சித் ரவதை; பாலியல் வன்பு ணர்வு புகார் வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டுள் ளது. இதற்கிடையில் இது வரை எடுக்கப்பட்ட நடவ டிக்கை குறித்து பிப்.27-இல் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் 143 பேர் அடைத்து வைக் கப்பட்டு சித்ரவதை செய் யப்பட்டுள்ளதும், இளம் பெண்களை போதைப் பொருட்கள் கொடுத்து பாலி யல் வன்புணர்வு செய்துள்ள தும், பலர் மர்மமான முறை யில் காணாமல் போயுள்ள னர் என்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பல்வேறு விதத்தில் சித்ர வதைக்கு உள்ளாக்கியதும் தெரியவந்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் பெண் கள் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். அங்கு இருந்தவர்களில் 16 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்ப தும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரமத்தில் பராம ரிக்கப்பட்டவர்களை அடித் துத் துன்புறுத்தியது, மன நலம் பாதிக்கப்பட்ட பெண் களை பாலியல் வன்புணர்வு செய்தது, வியாபார உள் நோக்கத்துடன் வெளிமாநி லங்களுக்கு கடத்தப்பட்டது உள்ளிட்ட பல சமூக விரோ தச் செயல்கள் இந்த ஆசி ரமத்தில் நடைபெற்றுள்ள தாக ஆய்வு செய்வதற்காக சென்ற அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். 13 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவ ரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என ஒன்பது பேரைக் கைது செய்துள்ள னர். இந்த நிலையில் இந்த வழக்கை திங்கள் கிழமை காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு (குற்றப் புல னாய்வுப் பிரிவு) சிபி சிஐடி-க்கு மாற்றி உத்தரவிட் டுள்ளார். இந்த நிலையில் ஹாலிதீன் என்பவர் தாக் கல் செய்த பொதுநல மனு வை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தர், எம்.நிர்மல் குமார் அமர்வு விசாரித்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர்.முனியப்ப ராஜ், ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி கைது செய்து அடைக்கப்பட்டுள்ள துணைச் சிறையில் வீடியோ கான்ப ரன்சிங் வசதி இல்லை என் றார். இதையடுத்து நீதிபதி கள் காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 27-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக் கல் செய்ய உத்தரவிட்டனர்.