பில்கிஸ் பானு கூட்டு வாலியல் வன்கொடுமை வழக்கின் குற்ற வாளிகள் 11 பேர் முன் கூட்டியே விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த வழக்கில் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கை மார்ச் 27 ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கில் தண்ட னை பெற்ற 11 பேரை விடு விக்க மற்ற வழக்குகளில் பின்பற்றும் விதிமுறைகளை தான் குஜராத் அரசு பின் பற்றியதா? என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், இதற்கான அனைத்து ஆவணங்களையும் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணை யை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு படுகொலை நிகழ்வுகளை ஒரு கொலை சம்பவத்துடன் ஒப்பிடக்கூடாது. ஆப்பிள் பழத்தை நீங்கள் ஆரஞ்சு உடன் ஒப்பிடுவீர்களா? என குஜராத் அரசிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.