சென்னை,டிச.30? எந்த வித குற்ற உணர்ச்சியும் இன்றி கோவில் சொத்துகளை ஆக்கிர மிக்கின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலையுடன் தெரி வித்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள பழமையான சித்தி கணேசர் நடராஜ பெருமாள் துர்கை அம்மன் கோவிலுக்கு சொந்த மான கல்யாண மண்டபம் நிர்வாகம் தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளி யன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறுகையில், மக்கள் தொகை அதி கரிப்பு, நகரமயமாக்கல் காரணமாக ஆக்கிரமிப்புகள் நடைபெறுகிறது. ஒரு காலத்தில் பொது மக்கள் தங்க ளது சொத்துகளை கோவிலுக்கு தான மாக அளிக்கும் பழக்கம் இருந்தது .ஆனால் தற்போது சொத்துகளை அப கரிப்பதும், சுரண்டுவதும் பயத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார்.