court

img

பதஞ்சலி மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

அலகாபாத்,ஜூன்.02- பதஞ்சலி நிறுவனத்தின் அபராதத்திற்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
பதஞ்சலி நிறுவனம் ஆன்லைனில் முறையாக ஜிஎஸ்டி பணப் பரிவர்த்தனை செய்யாமல் மோசடி செய்த வழக்கில் அந்நிறுவனத்திற்கு ரூ.273 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ.273 கோடி அபராதத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி தயாரிப்புகள், தவறான விளம்பரங்கள், பண மோசடி என பல்வேறு வழக்குகள் பதஞ்சலி நிறுவனத்தின் மீது இருப்பதும் சில வழக்குகளுக்குத் தண்டனை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது