court

img

ஏற்கெனவே ஓராண்டு வீணாகிப் போன படிப்பு

புதுதில்லி, பிப். 22 - ஹிஜாப் விவகாரத்தில், இறுதி  முடிவு எட்டப்படும் வரை, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்த படியே தேர்வெழுதுவதற்கு அனுமதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய முறையீடு செய்யப்பட்டு உள்ளது. கர்நாடக மாணவிகள் தாக்கல்  செய்த இந்த மனுவை, விசார ணைக்கு பட்டியலிடுவது குறித்து பரி சீலனை செய்வதாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரி வித்துள்ளார். ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக பாஜக அரசு விதித்த தடையை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த  வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லா மிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என‌  2022 மார்ச் 15-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் 6 பேர்  உட்பட மொத்தம் 23 பேர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த மனுக்களை, நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா  அமர்வு செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் விசாரித்து, அக்டோபர் 13 அன்று தீர்ப்பு வழங்கியது.  அப்போது, கர்நாடகக் கல்வி  நிலையங்களில் ஹிஜாப் அணி வதற்கு தடை விதிக்கப்பட்ட விவ காரத்தில், ‘ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என  நீதிபதி ஹேமந்த் குப்தாவும், ‘ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை  செல்லாது’ என மற்றொரு நீதிபதி யான சுதான்ஷூ துலியாவும் மாறு பட்ட தீர்ப்பை வழங்கினர். “எக்கார ணம் கொண்டும் பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது” என்று நீதிபதி சுதான்ஷு துலியா திட்டவட்டமாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

மேலும், இரண்டு நீதிபதிகள் அமர்வில் முடிவு எட்டப்படாததால், இவ்வழக்கை விரிவடைந்த அமர்வுக்கு மாற்றவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதுவரை, ஹிஜாப்பிற்கு தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த தடை உத்தரவே நீடிக்கும் என்றும் கூறப்பட்டது. இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் மார்ச் 9-ஆம் தேதி  தேர்வுகள் தொடங்க உள்ள நிலை யில், அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனு மதி வழங்க வேண்டும் என்று முஸ்லிம் மாணவிகளில் சிலர் புதன் கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுக்களைத் தாக்கல்செய்த னர்.  மாணவிகள் சார்பில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் ஆஜரான வழக்கறிஞர் ஷதன் பராசத், “மாணவிகளின் கல்வி எதிர் காலத்தை கருத்தில் கொண்டு இந்த வழக்கை அவசர வழக்காக  பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். “ஏற்கனவே அவர்களுக்கு ஒருவருடம் வீணாகி விட்டது. தற்போது அவர்கள் தனியார் கல்லூரி மாணவர்களாக இருந்தபோதிலும் தேர்வுகள் அரசு கல்வி நிறுவனங்களில்தான் நடைபெறுகின்றன. அதனால் அவர்களை தேர்வில் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.  இதையடுத்து, மாணவிகளின் கோரிக்கையை பரிசீலித்து வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.