மதுரை, ஜூலை 1- தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறி விப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித் துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் சங்கத்தின் தலை வர் ஷீலா பிரேம் குமாரி உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றி னை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘தமிழகத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களில் ஏராளமானோர், அப்போது அமலில் இருந்த வெயிட் டேஜ் முறையால் பணிக்கு தேர்வாக வில்லை. இந்நிலையில், தமிழக அர சின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு ஜூன் 23-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள் ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள் ளன. எனவே, தமிழக அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்த போது, ‘‘முறையான வழிகாட்டுதல் கள் இல்லாமல் தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிப்பது பெரும் ஆபத்தாக அமையும். இதுதொடர் பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளியன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய் யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப் பட்டது.
இதனையடுத்து நீதிபதி கூறுகை யில், ‘‘ஆசிரியர்களை தகுதி அடிப் படையில் நியமிப்பதற்கும், முன்னு ரிமை அடிப்படையில் நியமிப்ப தற்கும் நிறைய வேறுபாடுகள் உள் ளன. நிரந்தரமாக ஆசிரியர்களை நிய மனம் செய்வதில் அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது? முறையற்ற முறையில் நடைபெறும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தால் தகுதி யற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் நியமனம் மாணவர்களின் நலன் சார் ந்தது. இதில் அரசின் விளக்கம் திருப் திகரமாக இல்லை’’ எனக்கூறினார். எனவே, தமிழக அரசின் தற்கா லிக ஆசிரியர்கள் நியமனம் தொடர் பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்றும் அடுத்த விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.