தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ரா ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக ஜக செய்தித் தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ரா புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாகவும் , படுகொலை செய்யப்படுவதாகவும் போலியான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த பதிவில் இருந்த சம்பவம் வெளி மாநிலங்களில் எடுக்கப்பட்டவையாகும். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் தமிழ்நாட்டில் இதுபோன்று எந்த ஒரு சம்பந்தமும் நடைபெறவில்லை என நிறுபிக்கப்பட்டது.
அதன்பின் பாஜக செய்தித் தொடர்பாளரான உம்ராவ் மீது தமிழ்நாடு காவக்த்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் தமக்கு முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் தமிழ்நாடு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது. இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் உம்ராவ் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து முன்ஜாமின் பெற்றார்
இந்தநிலையில்தான், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரசாந்த் உம்ரா தாக்கல் செய்த இரண்டு மனுக்களை விசாரித்தது. 15 நாட்களுக்கு காவல்துறையில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை மாற்றியமைத்தது. அதில், “மனுதாரர் 15 நாட்களுக்கு காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவர் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும், அதன்பின் விசாரணை அதிகாரி தேவைப்படும்போது அவர் ஆஜராக வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.