cinema

img

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகியுள்ள 'ரைட்டிங் வித் ஃபயர்' ஆவணப்படம்

94 ஆவது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய ஆவணப்படமான ரைட்டிங் வித் ஃபயர் தேர்வாகி உள்ளது. 

2022 ஆம் ஆண்டுக்கான 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய ஆவணப்படமான 'ரைட்டிங் வித் ஃபயர்' தேர்வாகி உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இயக்குநர்கள் ரிண்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் இணைந்து இயக்கிய, 'ரைட்டிங் வித் ஃபயர்' என்ற இந்த ஆவணப்படம், பீகாரின் சீதாமர்ஹி பகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்திலும் உள்ள ஓரங்கட்டப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, பட்டியலினப் பெண்களால் நடத்தப்படும் 'கபர் லெஹ்ரியா' என்ற சமூகப் பத்திரிகையின் எழுச்சியை, உயிரோட்டமான கதையுடன் கூறியுள்ளது. இந்தப் படம் மொத்தமாகக் கலந்து கொண்ட 138 படங்களிலிருந்து, பரிந்துரை செய்யப்பட்ட 15 படங்களில் இடம்பெற்றது. பின்னர் அதிலிருந்து தேர்வாகி, இறுதிப் போட்டியில் இடம்பெறும் 5 படங்களில் ஒன்றாகப் போட்டியிடுகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு இடம்பிடித்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.