cinema

img

காவி உடை அணிந்து நடித்தால் தவறாம்! - சங்கிகள் கதறலுக்கு நடிகர் பிகாஷ் ராஜ் பதிலடி

காவி உடை அணிந்து நடித்தால் தவறு என்ற சங்கிகளின் கதறலுக்கு திரைப்படம் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
‘பதான்’ திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் காவி நிறத்தில் உடை அணிந்ததற்கு, பாஜக எம்.பிக்கள் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, படத்திற்கு தடை விதிக்க கோரி இந்தூரில் ஷாருக்கானின் புகைப்படங்கள் எரிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் திரைப்படம் நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து, “காவி உடை அணிந்து வெறுப்பு பிரசாரம் செய்வது, காவி உடை அணிந்த சாமியார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்பது, இதெல்லாம் தவறில்லை. ஆனால் ஒரு நடிகை காவி நிற உடை அணிந்து படத்தில் நடித்தது மட்டும் தவறா?” என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.