தமிழ்த் திரைப்பட உலகின் முக்கியமான 24 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி (FEFSI) அமைப்பினருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் புதிய ஊதிய உயர்வு 40% என்றளவில் பேசி முடிவு செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் அரசு தரப்பினரின் மேற்பார்வையுடன் கையெழுத்தாக இருப்பதாகவும் பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்களாம். அதனாலேயே இந்த இழுபறியாம். கடந்த சில ஆண்டுகளாகவே ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையில் இப்போதும் இப்படியான தொரு தாமதத்தால் தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். கொரோனா முடக்கங்களால் பெரிதும் வாழ்வாதாரம் இழந்துள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு இப்போது இப்படியும் பிரச்ச னைகள். தொழிலாளர்கள் என்றாலே மற்றவர்களுக்கு அலட்சியம்தானோ?