காலநிலை மாற்றம் தொடர்பான பொருத்தமான கதைக்கருவுடன், சமூகத்தின் வளர்ச்சியை புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த ‘2018’ திரைப்படம் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் தேர்வாகியுள்ளது. இதனிடையே, ‘2018’ படத்தில் நடித்ததுக்காக மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு ‘சிறந்த ஆசிய நடிகர்’ பிரிவில் நெதர்லாந்தில் நடந்த விழாவில் செப்டிமியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் 25-26 ஆகிய நாட்களில் செப்டிமியஸ் விருதுகள் (SEPTIMIUS AWARDS) வழங்கப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் உள்ள சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த மதிப்புமிக்க விருது விழாவில் டோவினோ தாமஸ் கலந்துகொண்டு விருதை பெற்றுள்ளார்.