cinema

img

பெரியவர்-சிறியவர், பழையவர்-புதியவர் என்றெல்லாம் பார்க்கலாமா?

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வி.ராஜா தயாரி த்து, நாயகனாக நடித்துள்ள படம் அருவா சண்ட. ஆதிராஜன் இயக்கி யுள்ள இந்தப் படம் இம்மாதம் 30 அன்று வெளியிடப்படவுள்ளது. இதன் இசை வெளியீட்டில் பங்கேற்று பாடல்களைக் கலைப்புலி தாணு வெளியிட, தயாரிப்பாளர் முரளி ராம நாராயணன், கேயார், கே.ராஜன், அசோக் சாம்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.  இவ்விழாவில் பேசிய வி.ராஜா சிறுபடத் தயாரிப்பாளர்களைக் கேவலமாக நினைக்கிறார்கள். சினிமா விழாக்களுக்கு கதாநாயகி கள் மட்டுமல்ல, அம்மா பாத்திரத்தில் நடிப்பவர்கள்கூட வருவதில்லை. இந்தப் படத்தில் நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனின் காலில்  விழாத குறையாக அழைத்தும் வர மறுத்துவிட்டார். கலைத்துறைக்குப் புதிதாக வருபவர்களைக் கலைத் துறையினரே நசுக்கிவிடுகிறார்கள். தயவு செய்து சிறிய தயாரிப்பாளர், பெரிய தயாரிப்பாளர், புதியவர், பழையவர் என பாரபட்சம் பார்க்கா தீர்கள் என்று அவர் கூறினார். பழம்பெரும் திரைக்கலைஞர்கள் எவரும் அறிமுகமானபோது புதிய வர்கள்தானே... இது ஏன் புரிவதில்லை?