நடிகர் போண்டா மணியின் ஏடிஎம் கார்ட்டில் இருந்து ஒரு லட்சம் பணம் சுருட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் போண்டாமணி 2 கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரிடம் நெருங்கி பழகிய ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் போண்டா மணி வீட்டிற்கு வந்துள்ளார். போண்டா மணியின் மனைவி மாதவி மருந்து வாங்கி வர ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் ராஜேஷ் பிரதீப் ஏடிஎம் கார்டு மூலம் நகைக்கடையில் ரூபாய் ஒரு லட்சத்திற்கு நகை வாங்கியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போண்டா மணி தரப்பினர் போரூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் ராஜேஷ் பிரித்தீவை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..