பெங்களூரு, பிப். 7 - சங்-பரிவாரங்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட பதான் திரைப்படம் ரூ. 700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கும் பிரகாஷ் ராஜ், “மதவெறியர்கள், முட்டாள்கள் குரைப்பார்களே தவிர கடிக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில், ஜனவரி 25-ஆம் தேதி வெளி யான திரைப்படம் ‘பதான்’. இத்திரைப் படத்தில் இடம் பெற்றுள்ள 3 நிமிட ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் டிசம்பர் துவக்கத்தில் வெளியான போது, அந்த பாடல் வரிகளுக்கும், பாடல் காட்சியில் தீபிகா படுகோனே, ஷாரூக்கான் அணிந் திருந்த உடைகளின் நிறங்களுக்கும் சங்-பரிவாரங்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். குறிப்பாக, தீபிகா படுகோனே காவி நிற நீச்சலுடையை அணிந்ததன் மூலம் இந்து மதத்தை அவமதித்து விட்டார் என்று கூப்பாடு போட்டனர். காட்சிகளை நீக்காவிட்டால் படத்தைத் திரையிட விடமாட்டோம் என பாஜகவைச் சேர்ந்த ம.பி. மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, சபாநாயகர் கிரீஷ் கவுதம், ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங், சாமியாரிணியும் பாஜக எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்குர், அயோத்தி அனு மன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ், இந்து மகாசபை தேசியத் தலை வர் சக்கரபாணி மகராஜ் உள்ளிட் டோர் மிரட்டினர். குஜராத், மத்தியப் பிர தேசம், அசாம் மாநிலங்களில் ‘பதான்’ திரைப்படம் வெளியாகவிருந்த தியேட்டர்களை அடித்து நொறுக்கிச் சூறையாடினர். பதான் திரைப்படத் திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
எனினும், ‘பதான்’ திரைப்படம் உல கம் முழுவதும் வெளியாகி தற்போது வசூலை வாரிக் குவித்து வருகிறது. வெளியான இரண்டே வாரங்களில் ரூ. 700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. வெளியா வதற்கு முன்பு படத்தை எதிர்த்தவர் கள், பின்னர் ஏனோ அடங்கிக்போனார்கள். இந்நிலையில்தான், திருவனந்த புரத்தில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வ தேச கடித திருவிழாவில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ், “பதான் திரைப் படத்தை தடை செய்யவும் புறக்கணி க்கவும் அழைப்பு விடுத்தவர்கள் சும்மா ‘குரைப்பவர்கள்’, ‘கடிக்கமாட்டார் கள்.. அவர்கள் பதான் திரைப்படத்தை தடை செய்ய விரும்பினர். ஆனால் படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த முட்டாள்கள், மத வெறியர்கள்... பதானை தடை செய்ய நினைத்தவர்கள், மோடியின் (பி.எம் நரேந்திர மோடி) படத்தை 30 கோடி ரூபாய் வசூலிக்கும் அளவுக்கு கூட பார்க்கவில்லை. எல்லோருக்கும் தெரிந்ததுபோல்... அவர்கள் குரைக்கிற வர்கள், கடிக்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளார். மேலும், பதான் படத்தை எதிர்த்த வர்கள், ‘காஷ்மீர் பைல்ஸ்’ என்கிற பிரச்சார படத்தை எடுத்தார்கள். அந்த படத்தை பார்த்து விட்டு சர்வதேச கலை ஞர்கள் துப்பினார்கள். அப்படியும் கூட இவர்களுக்கு எல்லாம் புத்தியே வர வில்லை. இந்த லட்சணத்தில் ‘காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை இயக்கிய டைரக்டர், எனது படத்துக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்க வில்லை? என்று கேட்கிறார். ‘ஆஸ்கர்’ இல்லை ‘பாஸ்கர்’ விருது கூட, அவருக்குக் கிடைக்காது” என்றும் பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ளார். “காவி உடை அணிந்து வெறுப்புப் பிரச்சாரம் செய்வது, காவி உடை அணிந்த சாமியார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்பது, இதெல்லாம் தவறில்லை. ஆனால் ஒரு நடிகை காவி நிற உடை அணிந்து படத்தில் நடித்தது மட்டும் தவறா?” என்று படம் வெளியாவதற்கு முன்பும், பாஜக, சங்-பரிவார் கூட்டங்களை பிரகாஷ்ராஜ் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.